பச்சை வண்ணம்!
எண்ண வியப்பளிக்கும் இனியநல் வண்ணங்கள்
என்னைக் கவர்ந்திடுதே ஈடில்லாப் பச்சைநிறம்!
பச்சை வண்ணனணி பசும்துழாய் மாலைகளும்
இச்சைமண மரிகொழுந்து, இன்மருவும் பைந்நிறமே!
வெள்ளைநிறம் செவ்வண்ணம் மஞ்சளொடு வான்நீலம்
கொள்ளை நிறங்களுடன் குவிந்திருக்கும் மலர்க் கூட்டம்!
அத்தனையின் பின்னணியில் அண்டிநிற்கும் பசுங்காம்பும்
சித்திரமாய் அழகுதரும் செழுமைபெறு இலைகளுமே
(thodarum)
வயசு கோளாறு
1 year ago

No comments:
Post a Comment