Thursday, December 4, 2008

யாதும் அன்பின் ஆட்சி !

வாதம் மோதும் பேச்சில்
...வாழ்வின் மேன்மை தோன்றுமோ?
பேதம் நீங்கி உண்மை
... பேசும் உள்ளம் வேண்டுமே!
தீதும் நன்றும் நாமே
...தேடிக் கொண்ட பாதையாம்!
யாதும் அன்பின் ஆட்சி
...என்று கொண்டால் சாந்தியே!

1 comment:

Akila said...

"தீதும் நன்றும் நாமே
...தேடிக் கொண்ட பாதையாம்.."

amma,
மனதை தொட்ட. . அருமையான வரிகள்
akilacsr