Saturday, December 6, 2008

மலர்கள்!

மலர்கள்!
=======
தென்றலினில் அசைந்தாடும் தேமதுரப் பூஞ்சிரிப்பில்
...செம்மலரும் மழலையுந்தான் ஓரினமே!
மின்னொளிரும் பொன்பூக்கும் மென்மையினில் மிஞ்சுகின்ற
...வண்ணமலர் மணம்கூடும் கோலமென்ன!
தன்னிகரில் இயற்கைத்தாய் தவமாகப் பெற்றனளோ?
...சந்ததமும் இறையழகை நினைவூட்டும்!
என்னவிதம் புகழ்வமிந்த எழில்மலர்கள் கொள்ளைதனை
...இங்கிதமாய்க் கொய்யாமல் தரிசிப்போம்1

1 comment:

Akila said...

"...இங்கிதமாய்க் கொய்யாமல் தரிசிப்போம்1 "
அம்மா..
எங்கிருந்து தான் வார்த்தை மலர்களை இப்படி அழகாக கோர்க்கிறீர்கள்?????
அருமை.. அருமையிலும் அருமை..