Thursday, December 18, 2008

பொன் மாலை!

எத்தனை நிறங்களோ எத்தனை வகைகளோ
...எத்தனை கோலங்களோ?
புத்தியில் தெரிந்திடும் போதியாய் ககனமும்
...பொற்புறும் மாலைஅந்தி யே!
வித்தினில் மரமென விறகினில் நெருப்பென
...வெண்ணையாய்ப் பாலுக்குள் ளே!
வித்தைகள் காட்டிடும் வித்தகன் பெருமையை
...விரித்திடும் பொன்மாலை யே!

1 comment:

Akila said...

வித்தினில் மரமென விறகினில் நெருப்பென
...வெண்ணையாய்ப் பாலுக்குள் ளே!

ரொம்ப அருமையான வரிகள் அம்மா...
akilacsr