Thursday, December 4, 2008

நகைச்சுவைப் பாடல்!

பள்ளிசெல்லும் அவசரத்தில் பரபரப்பாய் சிறுமியவள்;
...பலவகையாய்ப் பேனாவால் இன்னலுற்றாள்!
எள்ளிநகை யாடுமண்ணன் "என்னஎன்ன சொல்லிடுநீ
...எளிதாகச் சரிசெய்வேன்!" தங்கையவள்
சிள்ளெனவே சொல்கின்றாள் "திருகதிரு கதிருகுது"
..."திகிடதிகி டதிகிடதொம்"அண்ணனவன்
தெள்ளமுதச் சொற்கட்டில் சிரிப்பலைகள் மிஞ்சிடவே,
...சேர்ந்தொன்றாய் பள்ளிசெல்ல விரைந்தனரே!

No comments: