சின்னவடி நடைபயிலும் செஞ்சதங்கை கொஞ்சிவரும்
...சித்திரத்தின் முதலாண்டு நிறைவுதனில்
தென்றலவள் பட்டணிந்துத் திரியுவண்ணப் பூச்சியெனச்
... சிரிப்புடனே வருகையிலோர் காட்சியதோ
பொன்னொளிரும் கற்பூரப் பூவொளியில், மணியொலியில்
...பூரணனைப் பெரியவர்கள் போற்றுமுன்னே
தன்னழகுக் கண்மூடித் தலைசாய்த்துக் கரங்குவிக்கும்
...தளிர்மழலைச் செய்கையினில் மனங்குளிர்ந்தேன்!
வயசு கோளாறு
2 years ago
