Monday, June 21, 2010

கடவூர் அடைநெஞ்சே!--5


புரியா மயலாம் மயக்கங்கள்
இரியக் கருதில் அடைநெஞ்சே!
கரிகா டுடையான் அடிதேடும்
கரியாற் கரியான் கடவூரே....9

கரிகாடு =சுடுகாடு

கவலை மிகுஇப் புவிவாழ்வில்
அவமாய் அலையா(து) அடைநெஞ்சே!
அவசம் தருமின் அருள்தங்கும்
கவசத் தலமாம் கடவூரே!....10

அவசம்=வசமின்மை, பரவசம்

No comments: