Saturday, June 19, 2010

கடவூர் அடை நெஞ்சே!--4



புணையாய் வருமே புகல்நெஞ்சே!
துணையா ருமிலா தவந்திக்குப்
பிணையா ளெனவே அருள்செய்யக்
கணைதொட் டவனூர் கடவூரே....7

கணை=மண்வெட்டி.


நிரலாய் வினைசெய் துயர்சொல்லத்
தரமன் றெனநீ அடைநெஞ்சே!
அரனார் அவுணன் விறல்தீர்த்து
கரவாள் தருவார் கடவூரே....8

No comments: