Sunday, November 27, 2011

நஞ்சன்கூடு கண்டனே!

நஞ்சனகூடு (nanjangud)
மைசூரிலிருந்து சுமார் 25 கிமீ தொலைவில் நஞ்சனகூடு என்ற தலம் உள்ளது.
தினமலர்த் தளத்தில் தகவல்களையும் படங்களையும் காணலாம்:

http://temple.dinamalar.com/New.php?id=135
நஞ்சங் கூடு கண்டனே (Nanjangud (Kannada ನಂಜನಗೂಡು)

பம்பை உடுக்கை தாளமாய்ப்
...படர்தீ கானில் ஆடிடும்
நம்பன் உனது தாளினை
...நறும்பூத் தூவி சாற்றியே
செம்பொன் மேனி வண்ணனே
...தெம்பு சேர்க்கும் நாமமே
நம்பி .னாருக் கருள்செயும்
...நஞ்சன் கூடு கண்டனே...1

கோளும் தினமும் நன்றுறக்
...கூத்தன் உனையே எண்ணியும்
நீளும் பவமாம் தொடரற
...நிறைவாய்ப் பணியும் அன்புடன்
கேளும் துணையும் நீயெனும்
...கீர்த்தி மிகுதாள் சரணென
நாளும் தொழுவார்க் கருள்செயும்
...நஞ்சன் கூடு கண்டனே...2

2 comments:

Geetha Sambasivam said...

நன்றி.

Thangamani said...

படித்ததற்கு நன்றி கீதா!