பொற்றா ளமதில் ஒலியவள்
...புடையில் பங்காய் ஏற்றவ!
பெற்றார் எனிலுன் அன்பினைப்
...பெற்றார் தாமே புண்ணியர்?
மற்றா ருளரிங் குற்றவர்
...மறைகள் ஓதி இன்புறும்
நற்றாள் தொழுவார்க் கருள்செயும்
...நஞ்சங் கூடு கண்டனே!....3
குவியும் மலரில் கோத்திடும்
...கோல மாலை சூட்டியே
பவள வண்ணா என்றுனைப்
...பாடி நாளும் வணங்கினேன்
துவியென் றிரண்டாம் வினைதனை
...தூர ஓட்டிக் காவென
நவிலும் அன்பர்க் கருள்செயும்
...நஞ்சங் கூடு கண்டனே....4
வயசு கோளாறு
2 years ago

No comments:
Post a Comment