கங்கை கொன்றையை அணிவான் கறைமிளிர் மிடறுடை ஈசன்
மங்கை பங்கினன் ஆடல் வல்லவன் உறுதுணை யாவான்
திங்கள் வாடிய நாளில் திருவடி தொழஅவன் என்றும்
தங்கப் பொற்சடை தன்னைத் தந்தநம் தாயுமா .னவனே....9
தக்கனது சாபத்தால் தேய்ந்த சந்திரனை அழிந்தொழியாதவாறு முடியில் அணிந்தார்.
கருவி .னில்வளர் பிறவிக் கடலினைக் கடந்திடச் செய்வான்
அருவம் ஆகவும் உருவம் ஆகவும் உயிர்களைக் காத்திடும் ஈசன்
தருவின் கீழமர் குருவாய்த் தண்டமிழ்ப் புலவனு மாகித்
தருமி வேண்டிய பொன்னைத் தந்தநம் தாயுமா .னவனே....10
திருமணம் செய்ய விரும்பிய 'தருமி' என்னும் வறிய அந்தண பிரமசாரிக்கு அவன்
பொற்குவை பெறக், 'கொங்கு தேர் வாழ்க்கை' என்ற பாடலை அளித்ததைச்
சுட்டியது. திருவிளையாடற்புராணம்
'தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்'.
வயசு கோளாறு
4 months ago
No comments:
Post a Comment