Monday, January 2, 2012

திருக்காளத்தி!-- 5

வேத மெய்ப்பொருள் வேலன் ஓதிடும்
காதி னானுறை காளத்தி
ஆத ரம்பெறும் அன்பில் ஏத்திட
ஏத மென்பதும் இல்லையே....9

ஆடு வான்திரு ஆடல் தீயெரி
காடு ளானுறை காளத்தி
நாடி நற்றுணை நாளும் வேண்டிட
ஓடி வெவ்வினை ஓயுமே....10

2 comments:

Geetha Sambasivam said...

வேத மெய்ப்பொருள் வேலன் ஓதிடும்
காதி னானுறை காளத்தி //

அருமையான வர்ணனை. சுவாமிநாதனைக்கண்ணிலே காட்டிவிட்டீர்கள்.

Thangamani said...

ரசனைக்கு மகிழ்ந்தேன்.நன்றி கீதா!