திரணமிவ் வாழ்வில் தெளிமதி தந்தே
...திகழுறச் செய்தருள் ஈசா
சரணென உன்றன் தாளிணை வீழும்
...தமியனைக் காத்திட வேண்டும்
கிரணமென் றொளிசேர் கீர்த்தியில் நிற்பாய்
...கெடுவினை யொழியவும் அருளாய்
பரவிய பொன்னி பாய்கிற பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே....7
அரிஅயன் தேடும் அடிமுடி காணா
...அழலுரு வாய்நெடி துயர்ந்தாய்
வரியதள் உடையாய் மான்மழு தீயும்
...மகிழ்வுடன் கரமதில் கொண்டாய்
வரிசையில் துயர்செய் வருவினை தாங்கும்
...மனதையும் தந்தருள் செய்வாய்
பரிமளக் கொடிப்பூ படர்ந்திடும் பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே....8
வயசு கோளாறு
2 years ago

No comments:
Post a Comment