Wednesday, July 27, 2011

பராய்த்துறை மேவிய பரனே!-- 2

சொலவரு மின்பம் சுவைமிகு நாமம்
...துதிசெயு மடியரின் தேவே
அலமரு வேனென் அடைக்கல மாகி
...அருள்கிற துணையென வாராய்
நிலவணி சடையில் நிர்மல கங்கை
...நிலவிடு மெழிலினில் ஒளிர்வாய்
பலநிற மலரின் மணமிகு பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே....3

நசிவறு மேன்மை நலமிகக் காட்டி
...நலிவுறு எளியரைக் காப்பாய்
பசியினில் ஊணாய் பரிவினில் தாயாய்ப்
...பரவிடும் அன்பதும் நீயே
மசியிருள் மாய மலக்கினில் வீழா
...வழியினைக் காணவும் அருள்வாய்
பசியநல் இலைசேர் மணமலர் பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே....4

No comments: