Sunday, March 6, 2011

வண்ணப் பாடல்!

(தனதந்த தானத் தனதந்த தானத்
...தனதந்த தானத் தனதான)

சிறையென்று வாழக் குறைகொண்டி டாமற்
...சிவமென்று நாடற்..கருள்வாயே
பறைகொண்ட நாதத் தொலிமண்டு கானிற்
...பதமொன்று காணத் ..தருவாயே
அறைகின்ற வேதத் துறைகின்ற தீயுற்
...றழலென்ற சோதிப்.. பொருளோனே
திறமண்டு நாமத் திறைஎன்ற கோலத்
...திருநின்ற ஊரிற்.. பெருமாளே!

No comments: