Sunday, March 6, 2011

வண்ணப் பாடல்!

தினமொன்று மாயத் தனமென்று நாடித்
...தெளிவின்றி வாழக் ..குறியாமல்
உனதன்பை மேவிப் புகலென்று கோடற்
...குறுகின்ற தாளைத் ..தருவாயே
எனதென்று கூறத் தயைகொண்டு நேயற்
...கெளிதென்ற பார்வைக் குரியோனே
தினமின்பு சேரத் தருகின்ற கோலத்
...திருநின்ற ஊரிற்.. பெருமானே!

No comments: