Tuesday, March 15, 2011

வண்ணப் பாடல்!

'தன தனதந்த தத்தத் தனதன தானன தானதத்தா
'
இழை இசைகின்ற முத்துச் சுடரொளி மேவிய தோளசைத்தே
குழை யசைகின்ற நட்டத் தினிலிசை நாதமொ டாடலுற்றாய்
உழை யிசைகின்ற சக்திக் கனலுமை யாளவள் தேவுனக்கே
விழை விசைகின்ற சித்தத் தெளிவினை யேயருள் மாசறுத்தே.

இழை=ஆபரணம்,அணிகலன்.
உழை=பக்கம்.
குழை=காதணி.
விழைவு=நாட்டம்.

No comments: