Wednesday, January 28, 2009

பதமலர்!

கடலலையும் தவழ்நிலவும் கதிரொளியும் இறைவனவன் கனிவைக் கூறும்!
சடமெனவும் உயிரெனவும் சகலவிதப் படைப்புமவன் சதுரில் கூடும்!
விட அரவும் புலியதளும் விரிசடையில் நதிமதியும் மிளிரும் ஈசன்,
நடமிடுபொற் சதங்கையொலி நரலுகின்ற பதமலரை நயந்து கொள்வோம்!!

நரலுகின்ற=ஒலிக்கின்ற

(1-௩-௫ மோனை.)

No comments: