Tuesday, January 6, 2009

சக்தி!உனைக் கேட்டேன்!

சக்தி!உனைக் கேட்டேன்!

நிலையான அருளினுக்கோர் உறைவிடம்நீ!
...நிஜமென்று நம்புகின்றேன் பொய்யோ?
சிலையான உன்னிடத்தில் இரக்கமுண்டோ?
...சிறிதேனும் நடந்தவற்றைக் காண்பாய்!
கொலையான உயிர்களெல்லாம் உயிர்த்திடுமா?
...குமுறலினில் மானிடமும் பாழோ?
குலையாத அன்பினிலே திகழுலகைக்
...கொடுத்திடடி!சக்தி!உனைக் கேட்டேன்!

No comments: