Friday, January 2, 2009

உதிரி மலரே!



இறைவன் தாளில் ஏற்றமிக
...இயைந்து மிளிரும் உதிரிமலர்!
மறையின் உயர்ந்த வாழ்த்தொலியில்
...வணங்கித் தூவும் மலராவாய்!
குறையும் ஏனோ கொண்டிடுவாய்?
...குவளை நீரில் மலர்ந்திவாய்;
நிறைந்த வமைதி வேண்டிடுவோர்
...நெஞ்சில் நிறைவைத் தந்திடுவாய்!

No comments: