
புவிவாழ் வெனுமோர் பவமூழ்கித்
தவியா வழியாம் அடைநெஞ்சே!
சவிசேர் நவியன் சிவனாரின்
கவினார் பொழில்சூழ் கடவூரே....5
சவி=ஒளி,அழகு.
நவியம்=புதுமை,புதியது.
நிலையா உடலென் றறிவோடு
நலமே கொளநீ நவில்நெஞ்சே
அலைசேர் நதியன் அரவேதான்
கலமா உடையான் கடவூரே....6
கலம்=ஆபரணம்,அணிகலம்



