Tuesday, July 3, 2012

ஊன்றாப்பு (Uentrop) --2

தான்றான் உலகைத் தாங்கி அருள்பவனாம்
ஊன்றான் பதத்தை உள்ளன் பிலரகத்தில்
தேன்றான் சுவையோ திருப்பேர் சொலச்சுவைக்கும்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே.

 
கூன்றான் விழுந்து குமையும் முதுமையிலும்
ஆன்றான் அமரும் ஐயா எனவழுதால்
ஈன்றா னாகி இரங்கிக் காப்பவனை
ஊன்றாப்(பு) அரனை ஓதி உய்ம்மனமே....7


 ஏன்றான் நதியை எழிலார் சடைதன்னில்
தோன்றா அருவன் சோதி யானவனை
கோன்றான் நடத்தில் கோலங் கொண்டவனை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....8


தான் தோன் றியெனும் தந்தை தாயில்லா
வான் தோய் சிகர மலையன் சங்கரனை
ஊன் தேய் முதுமை உறினும் தொழவருளும்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே. ...9


தான் தோன்றி=சுயம்பு.

மான் தீ மழுவாள் சூலப் படைக்கரத்தன்
வான்சூழ் கோள்கள் மாறா தியக்குபவன்
ஊன்சேர்ந் துருக உன்னு வார்க்கருளும்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....10

1 comment:

Geetha Sambasivam said...

சொல்லாட்சி வியக்க வைக்கிறது அம்மா.