Friday, July 20, 2012

திருமாற்பேற் றரன்தன்னைச் சிந்தி-- 5

அங்கயற்கண் அம்மையுறு ஆகத் தானை
...அடலேறு தனிலமரும் அண்ணல் தன்னைத்
திங்களுடன் கங்கையையும் சிரமேற் றானைச்
...தென்மதுரை தனிலாடல் செய்தான் தன்னை
வெங்கடத்தில் இரவாடும் மெய்யன் தன்னை
...வீதியுலா வருகின்ற விமலன் தன்னை
செங்கமலத்(து) அளிமுரலும் தடங்கள் சூழும்
...திருமாற்பேற் றரன்தன்னைச் சிந்தி நெஞ்சே....9


வைதிடினும் ஏசிடினும்  வஞ்ச மின்றி
...வாழ்வருளிக் காக்கின்ற வள்ளல் தன்னை
மெய்ம்மையெனும் அன்புருவாய் மிளிர்வான் தன்னை
...மெய்யடியார் குறைதீர்க்கும் விடையன் தன்னைக்
கைலைதனின் மன்னவனாய்க் காணும் தேவைக்
...கைத்தலத்தில் அழலேந்திக் காப்பான் தன்னைத்
தெய்வமென நம்பிடுவார் தெளிவா வானைத்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....1o 

No comments: