Monday, July 9, 2012

மாற்பேற்று அரன்தன்னைச் சிந்தி (திருமாற்பேறு)

மாற்பேற்று அரன்தன்னைச் சிந்தி (திருமாற்பேறு)
---------------------------------------------
(திருத்தாண்டக அமைப்பு - எண்சீர் விருத்தம். பொதுவாகக் 'காய் காய் மா தேமா' என்ற
அரையடி வாய்பாடு. ஒரோவழி காய்ச்சீர் வருமிடத்தில் விளம்/மா வரும். அவ்விடத்தில்
மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்) 



துள்ளலைகள் அலைக்கின்ற துரும்பைப் போல
...துயரலைக்கும் வினையெல்லாம் மாற வேண்டில்
அள்ளியருள் வழங்குகின்ற ஐயன் தன்னை
...அஞ்சனவேல் விழியன்னை வணங்கும் தேவை
வெள்ளிநிலாச் சூடுகின்ற விடையன் தன்னை
...விந்தைமிகு ஆடலினை நடிக்கும் வேந்தை
தெள்ளுதமிழ்ப் பதிகத்தால் குரவர் போற்றும்
...திருமாற்பேற் றரன்தன்னைச் சிந்தி நெஞ்சே....1


தீம்புமலி வினைகடந்து மீள வேண்டில்
...செஞ்சடையான் நடமிடுதாள் மனத்தில் கொண்டுக்
கூம்பலரும் நாண்மலர்கள் கோத்துச் சூட்டிக்
...கும்பிட்டுப் பூசிப்பார்க்(கு) அருள்செய் வானைச்
சாம்பலினை மெய்ப்பூசும் மதியன் பேரைச்
...சங்கையின்றி ஓதிடுவார்த் துணையா  வானைத்
தீம்பழங்கள் நிறையுமரச் சோலை சூழும்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....2 


No comments: