Thursday, July 12, 2012

திருமாற்பேற்றரன் தன்னைச் சிந்தி-- 2

தீம்புமலி வினைகடந்து மீள வேண்டில்
...செஞ்சடையான் நடமிடுதாள் மனத்தில் கொண்டுக்
கூம்பலரும் நாண்மலர்கள் கோத்துச் சூட்டிக்
...கும்பிட்டுப் பூசிப்பார்க்(கு) அருள்செய் வானைச்
சாம்பலினை மெய்ப்பூசும் மதியன் பேரைச்
...சங்கையின்றி ஓதிடுவார்த் துணையா  வானைத்
தீம்பழங்கள் நிறையுமரச் சோலை சூழும்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....3 



தெம்பழிசெய் ஊழ்வினையை விரட்டவேண்டில்
...சித்தமெல்லாம் சிவமாக உய்விப்பானை
வம்பலரார் சிலைமதனை எரிசெய் தானை
...வார்சடையில் மதிசூடும் அண்ணல் தன்னை

அம்பலமே நடிக்கின்ற மேடை  யாகி
...ஆடலிலே உயிரனைத்தும் புரக்கின் றானை
ச்
செம்பரமாய் இலங்குமம்மை அப்பன் தன்னைத்

...திருமாற்பேற்றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....4
செம்பரம்=செம்பொருள்

No comments: