Friday, February 3, 2012

திருவேடகம்!--4

மின்னார் செஞ்சடையில் மிடை யும்பிறைக் கண்ணியுடன்
பொன்னா லேஇழையும் பொலி மார்புடை பூரணனாய்த்
தன்னே ரில்நடனம் தனை ஆடிடும் தாண்டவனே
தென்னா என்பவர்க்குத் திரு ஏடக மேயவனே....7

இழை= ஆபரணம்.
மிடைதல்=செறிதல்.

புரமோர் மூன்றினையும் பொடி யாகிடப் புன்னகைத்தாய்
சுரமார் பண்ணிசையில் சுக மேயுணர் வானவனே
வரமா மஞ்செழுத்தை மனம் ஓதிட வந்தருள்வாய்
திரையார் கங்கையனே திரு ஏடக மேயவனே....8

2 comments:

Geetha Sambasivam said...

இரு பாடல்களுமே அருமை.

Thangamani said...

மிக்க நன்றி!கீதா!