Saturday, February 11, 2012

திரு ஆனைக்கா!--1

(கலிவிருத்தம் - 'மா மா மா விளம்' என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.23.1 -
"மடையில் வாளை பாய மாதரார்")

இருள்செய் ஊழின் இன்னல் இரிந்திட
பொருள்கொள் உய்வாய் புகல்கொள் நெஞ்சமே
தெருள்கொள் எண்கால் சிலந்தி ஆளவே
அருள்செய் அண்ணல் ஆனைக் காவையே....1

இரிந்திட= சாய
தெருள்கொள்=(சிவ பக்தியில்)தெளிவுடைய.

ஒளிக்குள் வானாய் ஓங்கு வான்பெயர்
விளித்து நினைந்து வேண்டு நெஞ்சமே
பிளிற்றும் வேழம் பெறவோர் நற்கதி
அளித்த அண்ணல் ஆனை காவையே....2

1 comment:

Geetha Sambasivam said...

நல்லா இருக்கு.