Saturday, February 4, 2012

திருவேடகம்!-- 5

தொன்றா யானவனே துதி செய்பவர்க்(கு) அண்மையனே
வென்றாய் பூங்கணையை விடு வேளெரி வீழ்ந்திடவே
அன்றோர் தோழனுக்காய் அருள் செய்திடத் தூதுவனாய்ச்
சென்றாய் எற்கருளாய் திரு ஏடக மேயவனே....9

மட்டார் பூங்குழலி மகிழ் மாமலை மன்னவனே
அட்டாய் தென்னிலங்கை அரக் கன்திறல் அற்றிடவே
பிட்டே உண்டரசன் பிரம் பாலடி பட்டவனே
சிட்டா என்பவர்க்கே திரு ஏடக மேயவனே....10

2 comments:

Geetha Sambasivam said...

வென்றாய் பூங்கணையை விடு வேளெரி வீழ்ந்திடவே
அன்றோர் தோழனுக்காய் அருள் செய்திடத் தூதுவனாய்ச் //

தன் விஷயத்தில் காமனை எரித்தவர், சுந்தரருக்காக நடையாய் நடக்கிறார். வேடிக்கைதான். அருமையான பணி அம்மா.

Thangamani said...

ரசனையுள்ள கருத்து! நன்றி கீதா!