Saturday, February 25, 2012

திருஆனைக்கா!-5

இரியும் இன்னல்; இடர்செய் வல்வினை
சரிய எண்ணில் சாற்று நெஞ்சமே
உரியன் அன்பர்க்(கு); உன்னா தார்க்கவன்
அரியன் உறையும் ஆனைக் காவையே....9

சாற்று=சொல்லு.

வெந்து யரற விழைக நெஞ்சமே
சிந்தை சிவமாய்த் திகழ்பேய் அம்மையை
அந்த மிலன்பில் அன்னை யேஎனும்
அந்தி வண்ணன் ஆனைக் காவையே....10

No comments: