Saturday, February 18, 2012

திருஆனைக்கா! --3

சுழலார் வினைசெய் துன்பில் சிக்கியே
உழலா தடைய உரையென் நெஞ்சமே
கழலார் பாதன் கனகக் கொன்றையன்
அழலார் விழியன் ஆனைக் காவையே....5

வலையில் மீனாய் வதைசெய் வெவ்வினை
இலையென் றடைய இறைஞ்சு நெஞ்சமே
தலைவன் மலர்பூந் தாளை காவிரி
அலைகொண் டேத்தும் ஆனை காவையே....6

1 comment:

Geetha Sambasivam said...

காவிரி வந்து ஏத்தும் ஆனைக்கா அண்ணலுக்காக இயற்றிய பாடல்கள் அருமை.