Monday, January 30, 2012

திருவேடகம்! --2

எந்தாய் உன்நிழலில் எமை வைத்தருள் ஈந்திடுவாய்
கந்தார் பூவலங்கல் கமழ் தோளுடை கண்ணுதலே
சந்தார் தேவாரத் தமிழ் மாந்திடும் தற்பரனே
செந்தீ மேனியனே திரு ஏடக மேயவனே....3

சந்தார்=இசை நிறைந்த
கந்தார்= நறுமணம்நிறைந்த

பேரா யானவனை பிறை சூடியை போற்றிசெயச்
சேரா வல்வினைகள் தெறித் தோடிடச் செய்திடுவான்
காரார் மாமிடறா கழல் தந்தருள் கண்ணுதலே
தீரா என்பவர்க்கே திரு ஏடக மேயவனே....4

பேராய் ஆனவன்= நாமரூபன்.

1 comment:

Geetha Sambasivam said...

நல்ல பாடல். நன்றி.