Friday, December 9, 2011

திருக்காளத்தி!-- 2

விண்ணு லாவெயில் மூன்றும் தீப்படு
கண்ணி னானுறை காளத்தி
நண்ணி நற்றமிழ் நாளும் போற்றிடத்
திண்ண மாய்வினை தீருமே....3

விண்+உலாவு+எயில்=விண்ணுலாவெயில்

விண்ணி லாதிகழ் வேணி சேர்மலர்க்
கண்ணி யானுறை காளத்தி
அண்ணு வாருறு அன்பில் போற்றிட
மண்ணி னார்வினை மாயுமே....4

அண்ணுதல்= நெருங்குதல்.

3 comments:

Geetha Sambasivam said...

முதல் பாடல் திரிபுரங்களைக்குறிக்கிறதா? எயில் என்பது கோட்டை தானே?

Thangamani said...

ஆமாம்.எயில் என்பது கோட்டை.
முப்புரங்களை எரித்ததைத்தான் குறிக்கிறது.
நன்றி கீதா!

Thangamani said...

ஆமாம்.எயில் என்பது கோட்டை.
முப்புரங்களை எரித்ததைத்தான் குறிக்கிறது.
நன்றி கீதா!