Monday, December 5, 2011

திருமழபாடி!-- 3

வண்ணவிருத்தம்
-----------------
"தனனா தனனா .. தனதான"
"வரதா மணிநீ ...... யெனவோரில்" - திருப்புகழ் - பழநி.

தழையோ மலரோ .. அடிதூவின்
....சதமே அடைவா .. ரருளேதான்
பிழையே செயலா .. யலைவோரும்
....விடையோ .னினைவா .. லுயர்வாரே
விழைவா யரனார் .. புகழோதி
....மிகவே அடியார் .. தொழுமீசன்
அழகார் பொழில்சூழ் .. மழபாடி
....அகலா துறை மா மணிதானே....5

இதமா கிடுமே .. சிவநாமம்
....இணையே இலையே .. இனிதேதான்
முதலா .னவனாய் .. முடிவானான்
....முனமா லடிசேர்.. குருவானான்
சதமா யவனே .. கதியாகும்
....சரணா யடைவா .. ருளமேவும்
அதளா டையினான் .. மழபாடி
....அகலா துறைமா மணிதானே....6

1 comment:

Geetha Sambasivam said...

அதளாடையினான்= புலித்தோல் ஆடை???