Wednesday, October 26, 2011

மனம் போன போக்கில்!--5

புகலற் கேலா வினைசெய் துன்பப் புயலுழல் வாய்மனமே
சகலத் திற்கும் காரண .னானத் தற்பரன் அருள்தருவான்
நகசத் தோலை உடையாய் அணிவான் நறுமலர் மாலைகள்சேர்
அகலத் தையன் அகலா திருப்பான் அகன்றிடும் ஆரிருளே...9

நகசம்=யானை.
அகலம்=மார்பு.

உருளும் சகட வாழ்வில் நிலைக்கும் உத்தி அறிமனமே
மருளில் ஆழ்த்தும் பொருளி லாத மலக்கினை நீக்குபவன்
சுருளும் சடையில் பிறையும் நதியும் சூடித் திகழ்பவனாம்
ஒருவன் அன்பின் உருவன் நாமம் ஓதில் அறுவினையே...10

No comments: