நஞ்சை உண்ட நீல கண்டன் நம்பன் கழலிணையை
விஞ்சும் அன்பில் தஞ்சம் என்றே வேண்டின் உதவிடுவான்
கொஞ்சு செஞ்ச தங்கை பாதம் கொண்டோன் தண்ணருளால்
எஞ்சல் இன்றி வினைகள் ஓடி இன்பம் நிலைத்திடுமே....3
உலைசெய் துன்பம் கொள்ளாய் நெஞ்சே உய்வை வேண்டுதியேல்
சிலைஎய் வேளை கோபம் தோன்ற சிரித்து விழித்தவனாம்
மலையன், கானில் ஆடும் கூத்தன் மழுவாட் படையுடையான்
கலையொன் றேந்தி கழலி ணையைக் கருது தினந்தொறுமே....4
உலை=சஞ்சலம்,சிலை=வில்.
வயசு கோளாறு
2 years ago

No comments:
Post a Comment