Tuesday, October 11, 2011

'மனம் போன போக்கில்'--1

(அறுசீர் விருத்தம்-4 மா +'மா-கருவிளங்காய்/விளம்-கூவிளங்காய்'-வாய்பாடு.
-------------------------------------------------------------------------
சுடரும் முக்கண் தெய்வ மான சுந்தரன் தம்மடியார்
படரும் அன்பில் பண்ணார் பாடல் பைந்தமிழ் ஆரமிட்டார்
இடையில் கச்சாய் பாம்பும் வெம்மா ஈருரி மேனிதனில்
உடையும் உடைய ஒருவன் நாமம் ஓதிடில் உய்யலுண்டே....1

பெய்யும் மாரி யாக வந்தே பேரருள் செய்திடுவான்
தையல் பங்கன் தஞ்சம் வேண்டின் தன்னையே தந்திடுவான்
மெய்யி தென்றே மாய மலக்கில் வீழ்ந்திடு மாந்தரைப்போல்
தொய்ய வேண்டா முக்கட் செல்வன் துணையடி போற்றுநெஞ்சே....2

No comments: