Thursday, September 2, 2010

ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே!--6

கோதும் பழியும் கூட்டும் வாழ்வில்
...குறியாய் பொருளென் றொன்றே கொள்வாய்
ஏதுன் இலக்கு? சொல்வேன் கேளாய்
...ஏதம் செய்யும் துன்ப வெள்ளம்
மோதும் பவமாம் ஆழி வற்றும்
...முக்கண் பரமன் பாதம் பற்றி,
ஓதும் நாவ லூரர் அன்பன்
...ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.

கோது =குற்றம்
ஏதம்=துன்பம்

No comments: