Thursday, September 2, 2010

ஓணகாந்தன் தளிசேர் நெஞ்சே!--7


சுமக்கும் பார மல்ல யாக்கை
...துணைவன் உறையும் அன்புக் கோவில்!
அமைக்கும் மேடை தன்னில் நம்மை
...ஆட்டு விக்கும் ஆடல் மன்னன்!
இமைக்கும் கண்ணின் ஒளியாய்க் காக்கும்
...இமயத் தலைவன் ஈடொன் றில்லான்!
உமைக்கன் பிலிடம் தந்தான் மேவும்
...ஓணகாந்தன் தளிசேர் நெஞ்சே.

No comments: