மயலில் மூழ்கி இறையை எண்ணார்
...மயர்வைப் போக்கும் குருவாய் வந்தே
துயரில் ஆழ்த்தும் ஊழை வெல்லும்
...துணிவைத் தந்தே அருளும் தெய்வம்
நயனம் நுதலில் உடைய ஈசன்
...நதியும் மதியும் உமையும் கொண்டான்
உயரும் தழலாய் ஓங்கி நிற்பான்
...ஓண காந்தன்தளி சேர் நெஞ்சே.
வயசு கோளாறு
1 year ago

No comments:
Post a Comment