Sunday, September 5, 2010

ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே!--10


பதத்தை மனத்தில் பதித்துப் பாடல்
...படைத்து அருளை நினைக்கும் அன்பர்க்(கு)
இதத்தை அளித்துக் காக்கும் ஐயன்
...இதயம் தன்னைக் குடிலாய்க் கொள்வான்
விதத்தில் வேட மேற்று ஆளும்
...விகிர்தன் எமனை பக்த னுக்காய்
உதைத்துக் கருணை செய்த ஈசன்
...ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.

No comments: