Friday, September 3, 2010

ஓணகாந்தன் தளிசேர்நெஞ்சே!--8


விலையில் லாத இறையன் பேதான்
...வினையைப் போக்கும் இன்பம் சேர்க்கும்
வலையில் சிக்கும் மீனைப் போல
...வலிய மாயை தன்னில் வீழா
நிலையைத் தந்துய் விக்கும் வள்ளல்
...நினைந்து நாளும் துதித்துப் போற்றின்
உலைவை தீர்க்கும் உமையாள் பங்கன்
...ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.

உலைவு=சஞ்சலம்.

No comments: