Tuesday, April 6, 2010

குன்றத்தூர் அமர்ந்த கோவே! --- 4

தஞ்சமென அடியார் கூடிச்
...சங்கரனாம் உன்னைப் பாடப்
பிஞ்சுமதி நதியைச் சூடிப்
...பிஞ்ஞகனாய் நடிக்கும் ஈசா!
நெஞ்சமதில் நினைந்து நாளும்
...நின்னருளை நயந்தேன் ஐயா!
குஞ்சிரிப்பில் கருணை காட்டும்
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

No comments: