Tuesday, February 2, 2010

கருணையின் வடிவே!




கருணையின் வடிவாய்க் கனியும் தாய்முன்
...கரம்தவழ் குழந்தை யாகினேன்
அருளொளிக் குளிராய் அணைக்கும் பார்வை
...அளித்திடும் இதத்தைக் காண்கிறேன்!
தருமுயர் அபயம் சதமாய்ச் சாற்றும்
...தயைநிறை கரங்கள் தோன்றுதே!
திருவடி யிணையில் திளைக்கும் உள்ளம்
...சிவையெனும் உமையைப் போற்றுதே!


(சில வருடங்களுக்கு முன் சந்தவசந்தத்தில் நான் எழுதியது)

(கருவிளம் மா மா தேமா
கருவிளம் மா கூவிளம்)
(1-- 3-- 5 மோனை)

1 comment:

Geetha Sambasivam said...

அருளொளிக் குளிராய் அணைக்கும் பார்வை//

அருமையான பார்வை!