Monday, February 1, 2010

இறைவனேஅருள்செய்வான்!

குவைநிதிவளர் கவினிளமையும் சுவைதருவதும் எதுவரை?
இவைஅவையென தினம்வருந்திடும் விதம்திரிவதில் பயனிலை!
சிவையவள்பதி சிவகுருதவ நிலைநினைவுகொள்! மயலறும்!
நவையுறுபவ வினையழிவழி வகையருள்செயும் இறைவனே!

3 comments:

Geetha Sambasivam said...

மயலறும்= மயல்+அறும்????

Thangamani said...

//மயலறும்= மயல்+அறும்????//

மயல்=மயக்கம்
சிவனை நினைத்தால் இவ்வுலக இன்பமாகிய
மயக்கம் அழிந்துவிடும் என்ற பொருளில் எழுதினேன்.
கீதா! நன்றி!

Thangamani said...

அன்பு கீதா!
கவிதைப் படிக்கும் உங்கள் ஆர்வத்தைப்
பாராட்டுகிறேன்.மகிழ்ச்சியாக இருக்கு.
உங்கள் உடல் நலனைக் கவனித்துக் கொண்டு
இலக்கியத்தில் வலம் வரவும்!நன்றி!கீதா!