Tuesday, February 23, 2010

ஆரூர் அடை நெஞ்சே! --4.



கண்ணில் உதிரம் கசிந்திடக் கண்டுதன்
கண்ணை இடந்திறைக்குக் கண்ணப்பும் அன்புமனத்
திண்ணற்குத் தன்னுடனே சேர்ந்திருக்க இன்னருள்செய்
அண்ணல்மே(வு) ஆரூர் அடை.

உளிஒலிக் கற்றளி உள்ளத்துள் செய்துக்
களியுறுந் தொண்டரைக் காத்தவன்காண் நெஞ்சே!
ஒளிர்கழல் கூத்தில் உலப்பிலா இன்பம்
அளிஅரன்மே(வு) ஆரூர் அடை.

உலப்பிலா=அழிவிலா

No comments: