Sunday, February 14, 2010

ஆரூர் அடை நெஞ்சே!

வலையில் பிணிக்கும் மயலுறு வாழ்வில்
நிலையைக் கருதிடும் நெஞ்சே!விலையில்
கலைச்சுடர் கூத்தன் கருணை புரிவான்
அலைச்சடையன் ஆருர் அடை.

சுழலும் சகடச் சுழற்சியில் சிக்கி
உழலும் வினையை ஒழிப்பான்!தழலன்
கழல்வண்ணத் தண்ணளிக் காத்திடும் நெஞ்சே!
அழல்வண்ணன் ஆரூர் அடை.

No comments: