Saturday, January 23, 2010

மதிசூடி துதிபாடி! - 3

பூலா வனத்துப் பெருமானே!
-----------------------------

சிரத்தில் கங்கை மதியணிந்து
...திகழும் மார்பில் சரமிலங்க
கரத்தில் மழுமான் அழலுடனே
...கனகச் சபையில் நடமிடுவாய்!
வரத்தை அருளும் தயையுருவே!
...மனத்துள் நிறைவைத் தருநிதியே!
புரத்துள் உயிராய் விளங்கிடுவாய்!
...பூலா வனத்துப் பெருமானே!

(புரம்=உடல் என்ற பொருளில்.)

பாவாய்ப் பண்ணாய் அடியவரும்
...பணிந்து செய்தத் திருமறையை
நாவால் சொல்ல மனமுருகி
...நலமே அளிக்கும் எனதிறைவா!
காவாய் என்றே இறைஞ்சிடுமுன்
...கருணைக் கடலாய் அருள்தருவாய்!
பூவார் பொழில்சூழ் திருத்தலமாம்
...பூலாவனத்துப் பெருமானே!

No comments: