Tuesday, December 1, 2009

அருணேசா! அருள்வாயே!


அண்ணா மலையே!அருணேசா!
...அருவாய் அழலாய் ஒளிர்வாயே!
பெண்ணாய் ஆணாய் அலியானாய்
...பிறைவான் நதிசேர் சடையானே!
விண்ணோர் உனையே துதிசெய்ய
...விடத்தை மிடற்றில் உடையானே!
பண்ணாய் இசையாய் இசைவோனே
...பரிவோ டெமைக்காத் தருள்வாயே !


No comments: