Thursday, June 27, 2013

திருநெடுங்களம்---2

இரவெனப் பகலெனப் பொழுதினைப் படைத்தே
...இன்னருள் புரிந்திடும் எருதமர் தலைவா
பரவையில் துரும்பென அலைந்துழல் உலகில்
...பவமதைக் கடந்திட உன்கழல் பிடித்தே
பரவிடும் அடியரைப் பரிவுடன் அணைக்கும்
...பரமனே செந்தமிழ்ப் பாடலை விரும்பும்
அரசனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....3

சுமையென நோய்களும் தொடர்கிற மூப்பில்
...துணையுனைத் தேடினேன் துய்யனே ஈசா
எமையுன தலர்கழல் இணையடி நீழல்
...இடர்வினை தீர்த்துநல் இதமுறச் செய்வாய்
அமைதியும் தெளிவுறு ஞானமும் பெறவே
...அஞ்செழுத் தோதியுன் அருளினை கேட்பேன்
அமரனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....4

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான வேண்டுதல் வரிகள்... வாழ்த்துக்கள் அம்மா... நன்றி...

Thangamani said...

வரவுக்கும்,பாராட்டுக்கும்
மிக்கநன்றி தனபாலன்.