Monday, June 17, 2013

திரு வலம்---3

தண்மதி அலைநதி சடையுடை சிவனவன்
வெண்பனி மலையரன் மென்மலர் பதம்தொழ
விண்ணையும் தருகிற விமலனின் உறைவிடம்
வண்புனல் மலரடி பணிதிரு வலமே....7


கலைமதி அணிபெறும் சடையினன் கழல்தொழ
உலைவுற இடர்செயும் வினையழி வகைசெயும்
நிலைபெறும் அருள்தரும் நிமலனின் உறைவிடம்
அலைநதி அடிதொழ அணைதிரு வலமே....8


பணியினை சிரமதில் அணிபவன் அடியரின்
பிணியினில் இதமுற அருள்கிற அவுடதம்
அணிமையில் துணையென வருபவன் உறைவிடம்
மணிநதி மலரடி பணிதிரு வலமே....9


பழிவிட அலைநதி சடைதனில் அடையுற
விழிநுதல் உடையவன் வெளிர்பொடி அணிபவன்
வழியெலாம் இசைபொழி துதியுடன் பரமனை
வழிபடும் அடியவர் மகிழ்திரு வலமே....10

No comments: